ஆண்டுதோறும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். நடப்பாண்டு, நேற்று முன்தினம் பகல், 12:00 மணிக்கு சீகொலா பகுதியி இருந்து, ஐய்யனை அழைத்துவரும் நிகழ்ச்சியுடன், விழா தொடங்கியது. இரவு, 10:00 மணி முதல், அதிகாலை, 2:00 மணிவரை அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. முக்கிய திருவிழா நாளான நேற்று, அதிகாலை, 3:00 மணி முதல், 4:00 மணி வரை, ஐய்யன் சத்தியக் தொடையுடன், புலி வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. காலை, 10:00 மணி முதல், 1:00 மணி வரை, ஐயனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து, பகல், 1:00 மணிக்கு, கங்காதேவி பூஜை நடந்தது. தொடந்து, 1:30 மணிக்கு, முடிக்காணிக்கை நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்வு நடந்தது. இதனைத் தொடர்ந்து, பகல், 2:00 மணிக்கு மேல், ஐய்யன் புலி வாகனத்தில் கோவிலை சுற்றி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பகல், 2:30 மணிக்கு, கக்க கரைதல் (தேவர்களை அழைத்தல்) நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மதியம், 3:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், கூக்கல்தொரை சுற்றுவட்டார பகுதிகள் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, காணிக்கை செலுத்தி ஐய்யனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை, கூக்கல்தொரை, சீகொலா, குருமுடி மற்றும் உயிலட்டி சிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.