அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடப்பதையொட்டி, எஸ்.பி., அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடந்தது.
வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலில், வரும் 12ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி, அரியாங்குப்பம் எஸ்.பி., அலுவலகத்தில், பாஸ்கர் எம்.எல்.ஏ., எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், பொதுமக்களின் பாதுகாப்பு, குடிநீர், சுகாதார வசதி, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவது, மின்சாரம் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர், விநாயகமூர்த்தி, உதவிப்பொறியாளர் நாகராஜன், வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் சிறப்பு அதிகாரி சுரேஷ், திருப்பணிக்குழு தலைவர் மகாலிங்கம், மக்கள் குழு தலைவர் விஸ்வநாதன், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.