கோவையில் தியாகராஜ ஸ்வாமிகளின் 55ம் ஆண்டு ஆராதனை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2026 12:02
கோவை; சத்குரு ஸ்ரீ தியாகராஜா டிரஸ்ட் சார்பில் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் 55-ம் ஆண்டு ஆராதனை விழா ஐந்து நாட்கள் கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்வாக நேற்று மாலை 5 மணி அளவில் குத்துவிளக்கு ஏற்றி, கடவுள் வாழ்த்துடன் விழா துவங்கியது. இரண்டாம் நாளான இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணி அளவில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை நடந்தது. தொடர் நிகழ்வாக உஞ்சவிருத்தி பஜனை நடந்தது. காலை 10.30 மணியளவில் பஞ்சரத்தின கீர்த்தனைகள்,கோஷ்டி கானம்,அஷ்டோத்திரம் , புஷ்பாஞ்சலி நடைபெற்றது. நிறைவாக மகா தீபாரதனையுடன் காலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை 3.30 மணியளவில் ஸ்ரீ நாத ஜோதி முத்துசுவாமி தீட்சதர் மற்றும் ஸ்ரீ சியாமா சாத்திரிகள் தினம் கொண்டாடப்பட்டது .நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நிறைவாக அன்னதானம் வழங்கப்பட்டது.