பழநி கிழக்கு ரத வீதியில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. 21 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நேற்று (பிப். 6,) இரவு 8:42 மணிக்கு முகூர்த்தக்கால் நடுதல் உடன் திருவிழா துவங்கியது. பிப்.,10,ல் திருக்கம்பம் சாட்டுதல் நடைபெறும். இரவு 11:00 மணிக்கு குமாரசமுத்திரம், அழகுநாச்சி அம்மன் கோயில் அடிவாரம், அழகுநாச்சி அம்மன் கோயில் சாற்றுதல் நடைபெறும். பக்தர்கள் கம்பத்திற்கு பால், மஞ்சள் நீர் அபிஷேகம் செய்வர். பூவோடு எடுத்தல் உள்ளிட்ட நேர்த்தி கடன் செலுத்துவர். பிப்.,17ல் கொடியேற்றம், திருக்கம்பத்தில் பூவேடு வைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிப்.24,ல் அம்மனுக்கு திருக்கல்யாணம், பிப்.25ல் தேரோட்டமும் நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் வெள்ளியானை, தங்க குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மாரியம்மன் ரதவீதி உலா நடைபெறும். பிப்.26,ல் கொடி இறக்குதல் நடைபெறும்.