காளஹஸ்தி சிவன் கோயில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம்; சிறப்பு ஏற்பாடுகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2026 10:02
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்திற்காக கோயில் மற்றும் நகரம் முழுவதும் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோயிலின் நுழைவாயிலில் காட்சி தரும் தட்சிணா மூர்த்தி மற்றும் கோயிலின் பிரதான நுழைவாயிலில் உள்ள கொடி மரத்தின் அலங்காரங்கள் கண்கவரும் வகையில் உள்ளன, அதே நேரத்தில் நான்கு மாட வீதிகளும் மின் விளக்குகள் மற்றும் பந்தல்கள அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. ராஜகோபுரம் பகுதிகளில் உள்ள மண்டபங்கள் சிறப்பு அலங்காரங்கள் விழா கோலம் ஸ்ரீ காளஹஸ்தி க்கு வரும் பக்தர்கள் மற்றும் நகர மக்களின் ஆன்மீக உணர்வை மேம்படுத்துகின்றன. சிவராத்திரியை முன்னிட்டு, நகரம் ஒரு பண்டிகை சூழ்லையைக் கொண்டுள்ளது. குறிப்பாக நான்கு முக்கிய வீதிகளும் பண்டிகை சூழ்நிலையாக மாற்றப்பட்டுள்ளன. நான்கு மாட வீதிகளில் உள்ள நான்கு மூலைகளிலும் நிழற் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் ஆண்டுதோறும் நடத்தும் கலாச்சார கலை நிகழ்ச்சிகளால் பக்தர்கள் அதிருப்தி அடையாத வகையில் இந்த ஆண்டு கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ள்ளது. கோயில் பொறியியல் அதிகாரிகள் மேடை அலங்காரங்களில் கவனமாக செயல்பட்டு இந்த ஆண்டு, சிவராத்திரி பிரம்மோற்சவம் தொடர்பான கலாச்சார நிகழ்ச்சிகளில் பிரபலங்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொள்ள அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, அறங்காவலர் குழு முன்னிலையில் சுமார் 275 மேல் கலை நிகழ்ச்சிகளுக்கான வாய்ப்புகள் உள்ளது. கோயில் நமது, சிவராத்திரி பண்டிகை நம்முடையது போன்று ஒவ்வொருவரும் செயல் பட வேண்டும் என்று தேவஸ்தான அதிகாரிகளுக்கு செயல் அலுவலர் அறிவுரை செய்து வருகிறார்.