பொள்ளாச்சி, பழைய சர்க்கார்பதி குண்டத்து காளியம்மன் கோவிலில் நிகழ்ச்சி கடந்த மாதம் ஜனவரி 31ம் தேதியன்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. 1ம் தேதி, கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. 3ம் தேதி, ஊர் பூ வாங்கும் நிகழ்வு நடந்தது. 5ம் தேதி, விநாயகர் பொங்கல் பூஜை நடந்தது. 6ம் தேதி, கங்கையிலிருந்து மஞ்சள் நீர் கொண்டு வரப்பட்டது. 7ம் தேதி, குண்டம் திறக்கும் நிகழ்வு, திருத்தம் கொண்டு வருதல், பூவோடு எடுத்து வருதல், பூ வளர்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று, 8ம் தேதி, சுவாமி திருக்கல்யாணம் சக்திக்கும்பம் கொண்டு வருதல், குண்டம் இறங்கும் நிகழ்வு நடந்தது. இதில், பக்தர்கள் பலர் சுவாமியை வேண்டி குண்டம் இறங்கினார்கள். தொடர்ந்து முளைப்பாரி மற்றும் மாவிளக்கு எடுக்கும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து மஞ்சள் நீர், கம்பம் இறக்குதல் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடத்தது.