சக்தி விநாயகர் கோவிலில் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2026 05:02
கோவை: தை மாதம் விசாகம் நட்சத்திரம் மற்றும் தமிழ் மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் இருக்கும் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதில் சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.