பிரம்மோற்சவ விழா; சந்திர பிரபை வாகனத்தில் அருள்பாலித்த லட்சுமி நரசிங்க பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2026 05:02
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி நரசிங்கபெருமாள் சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கனூரில் லட்சுமி நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. இங்கு பிரம்மோற்சவ விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த, 6ம் தேதி அன்ன கூட்டம் உற்சவம் நடந்தது. 7ம் தேதி கொடியேற்றம், சிம்ம வாகனம், ஹம்சவாகனம் நிகழ்ச்சிகள் நடந்தன. 8ம் தேதி சூரிய பிரபை வாகனம், திருமஞ்சனம், கருட வாகனம், அனுமந்த வாகனங்களில் எழுந்தருளி, பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று 9ம் தேதி திருமஞ்சனம், நாச்சியார் திருக்கோலம், சந்திர பிரபை வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இம்மாதம், 12ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.