ராஜகாளியம்மன் கோயிலை இடிக்க முயற்சி: பக்தர்கள் தர்ணா போராட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2026 05:02
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ராஜகாளியம்மன் கோயிலை இடிக்க முயன்ற நகராட்சி அலுவலர்களை கண்டித்து, இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் நடவடிக்கை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
ராமநாதபுரம் நகர் முகவை ஊருணி மேல் கரை அருகே ராஜகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு சில மாதங்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. தினந்தோறும் பூஜை, வழிபாடு நடக்கிது. இந்நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி தனி நபர் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதில் நீதிமன்ற உத்தரவின் படி நேற்று ராஜகாளியம்மன் கோயிலை இடிப்பதற்கு நகராட்சி அலுவலர்கள் போலீசார் பாதுகாப்போடு மண் அள்ளும் இயந்திரத்துடன் வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கோயிலுக்கு அருகே ரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., சுகுமார் தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 10 நாட்கள் அவகாசம் அளிப்பதாகவும் அதற்குள் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுக் கொள்ளலாம் என்றும் பேசி முடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோயில் இடிப்பு நடவடிக்கை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.