சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித்திருவிழா; பிப். 21 ல் தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2026 11:02
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரர் கோயில் மாசித் திருவிழா பிப். 21 ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. குன்றக்குடி ஆதீனத்துக்கு உட்பட்ட, இக்கோயிலின் மாசித்திருவிழா பிப். 21 ம் தேதி காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது அன்றைய தினம் இரவு 7:00 மணிக்கு அரளிப்பாறை தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலும் கொடியேற்றம் நடக்கிறது. 10 நாள் மண்டகப்படியாக நடக்கும் இத்திருவிழாவின் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கும். பிப். 25 ல் ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரர் திருக்கல்யாணம், பிப். 26 ல் கழுவன் திருவிழா, சமணர்களுக்கு சாப விமோசனம் நடக்கும். மார்ச் 1 ல் மாசி தேரோட்டமும், மார்ச் 2 ல் தீர்த்தவாரியும் நடக்கிறது. ஏற்பாடுகளை குன்றக்குடி ஆதீனம் மற்றும் கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.