அரசு உத்தரவுப்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அறங்காவலர்கள் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணிச்செல்வன், பொம்மதேவன், , சண்முகசுந்தரம், ராமையா ஆகியோர் பதவிக்காலம் கடந்தவாரம் நிறைவடைந்தது. அவர்களை மீண்டும் அறங்காவலர்களாக அரசு நியமித்தது. அதன்படி சத்யபிரியா, மணிச்செல்வன், பொம்மதேவன், , சண்முகசுந்தரம், ராமையா ஆகியோர் நேற்று கோயில் துணை கமிஷனர் ஞானசேகரன், தெற்கு ஆய்வர் இளவரசி முன்னிலையில் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களாக நேற்று பதவி ஏற்றனர். பின்பு தேர்தல் அலுவலரான மதுரை அறநிலையத்துறை உதவி கமிஷனர் பிரதீபா முன்னிலையில் அறங்காவலர் குழு தலைவர் தேர்தவுக்கான ரகசிய ஓட்டெடுப்பு நடந்தது. ஓட்டெப்பில் அறங்காவலர் சத்யபிரியா ஏகமனதாக குழு தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றார்.கோயில் கண்காணிப்பாளர்கள் ரஞ்சனி, சுமதி சத்தியசீலன், பணியாளர்கள் கலந்து கொண்டனர். அறங்காவலர் குழுவினருக்கு தி.மு.க,. வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் பாலாஜி வாழ்த்து தெரிவித்தார். பின்பு அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.