பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மாசி மாத வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2026 10:02
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மாசி மாத பிறப்பு, விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
பரமக்குடி சவுந்தரவல்லி தாயார் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் நாளில் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை சேவிக்கப்படுகிறது. மேலும் கோமாதா பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாசி மாத விஷ்ணுபதி புண்ணிய காலம், என்பதால் ஏராளமான பக்தர்கள் அதிகாலை 5:00 மணி முதல் கொடிமரம், கருவறை என 27 முறை சுற்றி வந்தனர். அப்போது அனைத்து வகையான தோஷம், பாவம் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும், என்ற நம்பிக்கை உள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர். ஒவ்வொரு வைகாசி, ஆவணி, கார்த்திகை ஆகிய தமிழ் மாதங்களின் முதல் நாள் விஷ்ணுபதி புண்ணிய காலம், எனப்படுகிறது. அப்போது சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அன்றைய தின வழிபாடு என்பது ஏகாதசி விரத நாள் பலனை கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.