திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில் நாளை கருட சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2026 11:02
காஞ்சிபுரம்: திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில், பிரம்மோத்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை கருட சேவை உத்சவம் நடக்கிறது. காஞ்சிபுரம் அடுத்த, திருப் புட்குழி கிராமத்தில், மரகத வல்லி சமேத விஜயராகவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் பிரம்மோத்சவம் நடைபெறும். நடப்பு ஆண்டு பிரம்மோத்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாவது நாள் உத்சவமான நாளை காலை கருடசேவையும், இரவு ஹனுமந்த வாகன உத்சவமும் நடக்கிறது.