பரமக்குடி: பரமக்குடியில் விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் நேற்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு மாலை அபிஷேகம் நடந்து, சுவாமிகள் ரிஷப வாகனத்தில் கோயில் பிரகாரத்தில் வலம் வந்தனர். மீனாட்சி சுந்தரேஸ்வரர், எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர், நயினார்கோவில் நாகநாத சுவாமி, பெருங்கரை அட்டாள சொக்கநாதர் உட்பட அனைத்து சிவாலயங்களிலும் பக்தர்கள் ஹர ஹர, சிவ சிவ கோஷம் முழங்க பிரார்த்தனை செய்தனர்.
திருவா டானை: ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனாய வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ் வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர், நம்புதாளை நம்புஈஸ்வரர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர், வட்டாணம் காசிவிஸ்வநாதர் கோயில்களில் நேற்று சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. சிவசாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
திருப்புல்லாணி: ரெகுநாதபுரம் அருகே ராணி மங்கம்மாள் சாலை செல்லும் வழியில் வண்ணாங்குண்டு கிராமத்தில் குச்சிலியமடம் மகாமுனீஸ்வரர் கோயில் உள்ளது. பழமையான ஆலமரத்தின் கீழ் உள்ள நாகேஸ்வரர் பெருமானுக்கு சனி பிரதோஷத்தை முன்னிட்டுமூலவர் மற்றும் நந்தி பகவானுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இதுபோன்று மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் சனிபிரதோஷத்தை முன்னிட்டு மூலவர், நந்தி பகவானுக்கு அபிேஷகம் அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.