தஞ்சாவூர் பெரிய கோவிலில் மகாசிவராத்திரி விழா: விடிய விடிய பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2026 10:02
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் விடிய விடிய சுவாமி தரிசனம் செய்தனர்.
மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி திதியன்று வருவது மகாசிவராத்திரி. சிவபெருமானை விட்டு பிரியாத சக்தி அனைத்து உயிர்களும் உயர்வு பெற நான்கு காலங்களும் சிவனை பூஜித்த காலமே மகாசிவராத்திரி எனப்படுகிறது. இந்த சிவராத்திரி விழா தஞ்சாவூர் பெரியகோவிலில் நடைபெற்றது. அப்போது பெருவுடையார், பெருயநாயகி அம்மனுக்கு நேற்று இரவு 10 மணி, நள்ளிரவு 12.30 மணி, அதிகாலை 2 மணி, 4 மணி என நான்கு காலத்திலும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து இரவு முழுவதும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பெரிய கோவிலில் பக்தர்கள் விடிய விடிய தரிசனம் செய்தனர். மேலும், தமிழக அரசு சார்பில், தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு பரதநாட்டியம், தமிழர்களின் இசை நிகழ்ச்சிகளும், பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சிகளும் விடிய விடிய நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் தஞ்சாவூர் தஞ்சபுரீஸ்வரர், திருவையாறு ஐயாறப்பர் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் நேற்று சிவராத்திரி விழா விடிய விடிய நடைபெற்றது.