திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தென்பசியார் நாக அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை உற்வசம் நடந்தது. அதனையொட்டி, நேற்று பிற்பகல் 12:30 மணியளவில், நாக அங்காளம்மன் காளி வேடத்தில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை, கோவில் அறக்கட்டளை நிறுவனர் கவுன்சிலர் ராம்குமார் செய்திருந்தார்.