Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆழீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் ... திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயில் சஷ்டி பூஜை திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீஊருடையம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்: ஓங்கி ஒலித்த ‘ஓம் சக்தி பராசக்தி’ கோஷம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீஊருடையம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்: ஓங்கி ஒலித்த ‘ஓம் சக்தி பராசக்தி’ கோஷம்

பதிவு செய்த நாள்

23 பிப்
2026
01:02

திருப்பூர்: 15 வேலம்பாளையத்தில் உள்ள, ஸ்ரீ ஊருடையம்மன் கோவில் பிரசித்தி பெற்றது; திருப்பணிகள் நிறைவுற்று, மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நேற்று நடந்தது.


முகூர்த்தக்கால் பூஜை, ஜன., 28ம் தேதி நடந்தது; அரசமர விநாயகருக்கு பாலாலய பூஜைகள் நடந்தன. பிப்., 4ல் முளைப்பாரி போடும் நிகழ்ச்சி நடந்தது.


கடந்த, 20ம் தேதி விநாயகர் வழிபாடு, புண்யாஹவாசனம், கோபூஜை, கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக கலசபூஜைகள் நடந்தன. தொடர்ந்து, கோபுரம் கலசம் வைத்து, அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது.


மூன்று கால வேள்வி பூஜைகள், திருமுறை விண்ணப்பம் மற்றும் வேத ஆகம மந்திரங்களுடன் நடந்தன.


நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, நான்காம் கால வேள்வி பூஜைகள் நடந்தன; மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, நாடி சந்தானம், மங்கள திரவியாகுதி, பூர்ணாகுதியுடன் வேள்வி பூஜைகள் நிறைவு பெற்றன.


காலை, 8:30 முதல், 9:30 மணிக்குள், கன்னிமூல கணபதி , ஸ்ரீஊருடையம்மன் கோபுரம் மற்றும் மூலாலய கும்பாபிஷேகம் நடந்தது.


அவிநாசி 2வது ஸ்தானீகம் குமார சுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர், வேத சிவாகம முறைப்படி கும்பாபிஷேகம் நடத்தினர்.


சிவாச்சாரியார்கள், புனித தீர்த்தங்களை விமான கலசம் மற்றும் மூலவர் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.


‘ஓம் சக்தி பராசக்தி ’ என்ற கோஷமிட்டபடி, பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர். மகா அபிஷேகம், தசதரிசனம், தசதானம், சிறப்பு அலங்கார பூஜை, உபசார வழிபாடு, மகாதீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


அன்னதானம், காலை முதல் மாலை வரை நடந்தது. இன்று முதல், மண்டல பூஜை துவங்குகிறது.கும்பாபிஷேக ஏற்பாடுகளை, உபயதாரர்கள், 15 வேலம்பாளையம் ஊர்பொதுமக்கள்செய்திருந்தனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar