பதிவு செய்த நாள்
26
பிப்
2026
02:02
புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில், 431 வது ஆண்டு அவதார தின விழா கொண்டாடப்பட்டது.
புவனகிரி, ராகவேந்திரர் அவதார இல்லத்தில், ஆண்டுதோறும் ஆராதனை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தற்போது, 431 ம் ஆண்டு அவதார தினத்தை முன்னிட்டு சுப்ரபாதத்துடன் ஸ்தோத்திர பாராயணம், நிர்மால்ய அபிஷேகம் நடந்தது.
மேலும், சுவேத நதி தீர்த்தத்துடன், மந்த்ராலய மரபின் படி பால், பன்னீர் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு நறுமணத்துடன் கூடிய,திட மற்றும் திரவப்பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பகலில் மகா தீபாராதனையும், அன்னதானமும் நடைபெற்றது. இரவு ஸ்வஸ்தி பூஜை நடந்தது.
ஏற்பாடுகளை கவுரவ தலைவர் சுவாமிநாதன், தலைவர் ராமநாதன், செயலர் உதயசூரியன், பொருளார் கதிர்வேல் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர். பூஜைகள் ரமேஷ் ஆச்சாரியர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன. இதில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
86181ராகவேந்திரர் கோவிலில் 431 வது ஆராதனை விழா
புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில், 431 வது ஆண்டு அவதார தின விழா கொண்டாடப்பட்டது.
புவனகிரி, ராகவேந்திரர் அவதார இல்லத்தில், ஆண்டுதோறும் ஆராதனை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தற்போது, 431 ம் ஆண்டு அவதார தினத்தை முன்னிட்டு சுப்ரபாதத்துடன் ஸ்தோத்திர பாராயணம், நிர்மால்ய அபிஷேகம் நடந்தது.
மேலும், சுவேத நதி தீர்த்தத்துடன், மந்த்ராலய மரபின் படி பால், பன்னீர் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு நறுமணத்துடன் கூடிய,திட மற்றும் திரவப்பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பகலில் மகா தீபாராதனையும், அன்னதானமும் நடைபெற்றது. இரவு ஸ்வஸ்தி பூஜை நடந்தது.
ஏற்பாடுகளை கவுரவ தலைவர் சுவாமிநாதன், தலைவர் ராமநாதன், செயலர் உதயசூரியன், பொருளார் கதிர்வேல் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர். பூஜைகள் ரமேஷ் ஆச்சாரியர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன. இதில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.