காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் மாசி- பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2026 11:03
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். இன்று காலை கொடியேற்றம் விழா தொடங்கியது. தொடர்ந்து, காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். மார்ச் 17ம் தேதி கோயில் கரகம், மது முளைப்பாரி நடைபெறுகிறது. முக்கிய திருவிழாவான பால்குடத் திருவிழா மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி மார்ச் 18 காலை நடைபெறுகிறது. மாலையில் கோயில் கரகம் பருப்பூரணியில் சேர்த்தல் நிகழ்ச்சியும் இரவு காப்பு பெருக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மார்ச் 19 அம்மன் திருவீதி உலாவும், மார்ச் 20 சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.