குமாரபாளையம்; குமாரபாளையம், காளியம்மன் கோவிலில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவையொட்டி, சிறப்பு வழிபாடு நடந்தது. குமாரபாளையத்தில் உள்ள தேவாங்கர் மாரியம்மன், 24மனை மாரியம்மன், பெரிய மாரியம்மன், காவேரி நகர் மாரியம்மன், எல்லை மாரியம்மன் உள்ளிட்ட அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் பூச்சாட்டு விழா நடந்தது. இதனையொட்டி காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டு, கம்பம் நடப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. காளியம்மன் கோவில், தேவாங்கர் மாரியம்மன், 24 மனை மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில்களின் சார்பில், தினமும் கட்டளைதாரர்களின் அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது. கோட்டைமேடு காளியம்மன் கோவில், கள்ளிபாளையம் காளியம்மன், மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 24 மனை மாரியம்மன் கோவிலில், வெற்றிலை அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.