நெல்லிக்குப்பம் ஐயப்பன் கோவிலில் பங்குனி பிறப்பு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2026 11:03
நெல்லிக்குப்பம்: ஐயப்பன் கோவிலில் தமிழ் மாத சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நெல்லிக்குப்பம், ஐயப்பன் கோவிலில் பங்குனி மாதம் பிறப்பை முன்னிட்டு ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு பால், தயிர்,சந்தனம் உட்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.