மயிலம் மயிலியம்மன் கோவிலில் மாசி திருவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2026 11:03
மயிலம்: மயிலத்தில் மயிலியம்மன் கோவிலில் மாசி திருவிழா துவங்கியது.
அதனையொட்டி, கடந்த 13ம் தேதி மாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. இரவு 9:00 மணிக்கு காப்பு கட்டுதல் நடந்தது. நேற்று 15ம் தேதி மூன்றாம் நாள் விழாவைத் தொடர்ந்து, இன்று 16ம் தேதி ஆட்டுக் கிடா வாகனத்திலும், 17ம் தேதி சிம்ம வாகனத்திலும், 18ம் தேதி மின் விளக்குகளினால் அலங்கரித்த ஒடத்திலும், 19ம் தேதி முத்துப் பல்லகிலும் வீதியுலா நடக்கிறது. வரும் 20ம் தேதி மாலை 4:00 மணிக்கு ஊரணி பொங்கல் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவமும் 10:0 மணிக்கு திருத்தேரில் அம்மன் வீதியுலாவும் நடக்கிறது. நள்ளிரவு 12:00 மணிக்கு பக்தர்கள் கிராம எல்லை வழிபாட்டிற்கு புறப்பாடு நிகழ்ச்சியும், 21ம் தேதி மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.