பழநி காளிதாஸ் சுவாமிகள் தர்மாஸ்ரமத்திற்கு வந்த ராமரத யாத்திரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2026 04:03
பழநி; பழநி காளிதாஸ் சுவாமிகள் தர்மாஸ்ரமத்திற்கு கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ஆஞ்சநேய ஆசிரமம் சார்பில் ராம ரத யாத்திரை நடந்தது.
பழநி காளிதாஸ் சுவாமிகள் தர்மாஸ்ரமத்திற்கு கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ஆஞ்சநேயர் ஆசிரமம் சார்பில் ராமநவமியை முன்னிட்டு ராம ரத யாத்திரை நடந்தது. இந்த ரத யாத்திரை மார்ச் 20ல் கூடலூரில் துவங்கி கல்லார், மேட்டுப்பாளையம், கோயமுத்தூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் வழியாக நேற்று மதியம் பழநி வந்தது. காளிதாஸ் சுவாமிகள் ஆசிரமத்தில் சிறப்பு தரிசனம், அன்னதானம் நடைபெற்றது. அதன் பின் சரி முக்கிய வீதிகளில் சென்று அதன் பின். திண்டுக்கல், மதுரை நோக்கி ரத யாத்திரை சென்றது. ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மணிவண்ணன், ஹிந்து அமைப்பினர் ரத யாத்திரை வாகனத்தை வரவேற்றனர்.