Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் மாவட்ட கோவில்களில் ராம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா; அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா; அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

28 மார்
2026
08:03

உடுமலை: உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 24ம் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.


திருவிழாவில், நேற்று மாலை, 4:00 மணிக்கு, அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள், பிரசன்ன விநாயகர் கோவிலிலிருந்து, மல்லிகை, முல்லை, ரோஜா, செவ்வந்தி, அரளி, பிச்சி, சம்மங்கி, பன்னீர் புஷ்பம், பட்டு ரோஸ் உள்ளிட்ட பல்வேறு வண்ணம், ரக பூக்களை கூடைகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து, மூலவரான அம்மனுக்கு பூக்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. திருவிழாவில், வரும், 31ம் தேதி, மாலை, 7:00 மணிக்கு, கம்பம் போடுதல் நிகழ்ச்சியும், ஏப்., 2ம் தேதி, இரவு, 12:00 மணிக்கு, கிராம சாந்தி, வாஸ்து சாந்தி நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏப்., 3ம் தேதி, மதியம், 1:00 மணிக்கு, கொடியேற்றம், மதியம், 2:00 மணிக்கு, பூவோடு துவக்கமும், 7ம் தேதி, இரவு, 10:00 மணிக்கு, பூவோடு நிறைவு நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்., 8ம் தேதி, அதிகாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலமும், மாலை, 3:00 மணிக்கு, அம்மன் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், ஏப்., 9ம் தேதி நடக்கிறது. அன்று காலை, 6:45 மணிக்கு அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை, 4:00 மணிக்கு திருத்தேரோட்டமும் நடக்கிறது.


10ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, ஊஞ்சல் உற்சவம், இரவு, 8:00 மணிக்கு, பரிவேட்டை, இரவு, 10:00 மணிக்கு வாண வேடிக்கை நிகழ்ச்சியும் நடக்கிறது. 11ம் தேதி. காலை, 8:15 மணிக்கு கொடியிறக்கம், 11;00 மணிக்கு, மகா அபிேஷகம், மதியம், 12:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு, மாலை, 7:00 மணிக்கு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு, ஏப்., 3ம் தேதி முதல், தினமும் மாலை, 7:30 மணிக்கு, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து அருள்பாலிக்கிறார். மேலும், கோவில் வளாகம் மற்றும் குட்டைத்திடலில், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே குட்டூர் உண்ணாமுலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோவில் கால பைரவர் கோவிலில் ... மேலும்
 
temple news
அவிநாசி; சேவூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் சுவாமி கோவிலில் 40ம் ஆண்டு ஸ்ரீ ராம நவமி மஹோத்ஸவ விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar