காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சனிக் கிழமை பங்குனி உத்திரத்திருநாளை யொட்டி உற்சவர் காமாட்சி அம் மன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மகா சக்தி பீடங்களில் ஒன்றான இக்கோயிலில் பங்குனி உத்திரத் திரு நாளையொட்டி கோயில் வளாகத்தில் உள்ள திருக்குளத்தில் வண்ண மின்வி ளக்குகள் மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்ச வர் காமாட்சி பவனி வந்தார். முன்னதாக கோயில் அலங்கார மண் டபத்திலிருந்து லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம் பிகை எழுந்தருளினார்.
தெப்பத்தில் சிறப்பு தீபாராதனைக ளும் நடைபெற்றன. தெப்பத்திருவிழா வையொட்டி வாண வேடிக்கைகளும் நடைபெற்றது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற தெப்போற்சவம். முதல் நாளில் தெப்பத்தில் 3 சுற்று கள் உற்சவர் வலம் வந்தார். ஞாயிறு, திங்கள் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயர், மணியக்காரர் சூரியநாராயணன் ஆகியோர் தலைமையில் விழாக்குழுவி னர் செய்திருந்தனர்.