வேதமாதா என்பது காயத்ரியைக் குறிக்கும். மந்திரங்களில் சிறந்ததாக காயத்ரி விளங்குகிறது. உபநயனம் செய்யும்போது காயத்ரிமந்திரத்தையே உபதேசிப்பர். இதனை தினமும் ஜெபித்தால் எல்லா நன்மைகளும் வாழ்வில் பெருகும். பொதுவான காயத்ரி மந்திரம் தவிர ஒவ்வொரு தெய்வங்களுக்கும் தனித்தனி காயத்ரி மந்திரமும் உண்டு.