பதிவு செய்த நாள்
02
ஏப்
2026
01:04
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் சிறப்பாக நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
குஜிலியம்பாறை ராமகிரியில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி திருக்கோயில் உள்ளது. இப்பகுதியில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில், திருமணம் ஆகாதவர்கள் வந்து வணங்கினால், திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். இக்கோயிலில் நடப்பு ஆண்டிற்கான பங்குனி உற்சவ திருவிழா மார்ச் 25 ல் கொடியேற்றத் துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள், தேரில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன் பிறகு காலை 8:39 க்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷம் எழுப்பியபடி தேரோட்டம் துவங்கியது. முக்கிய வீதிகளில் வலம் வந்த தேர், காலை 9:41 க்கு நிலையை அடைந்தது. கோயில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, கோயில் திருப்பணி கமிட்டி தலைவர் கருப்பணன், கோயில் அர்ச்சகர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.