* பெற்றோர் தேடிய சொத்தில் வாழாதே. உழைத்து சாப்பிடு. * அறிவைத் தேடிச் செல். செல்வம் தானாக வரும். * உதவி செய்ய எவ்வளவு பேர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம். * எவ்வளவு இடையூறு வந்தாலும் எடுத்த செயலில் உறுதியாக இரு. * எதிர்பார்ப்பு இல்லாமல் பிறருக்கு உதவினால் நீயே உயர்ந்தவன். * நம்பிக்கையுடன் முயற்சி செய். வெற்றி உறுதி. * அறிவு, செல்வம், தைரியம் ஆகிய மூன்றும் அவசியம் வேண்டும். * ஒருவர் கஷ்டப்படும் போது அவருக்கு ஆறுதலாக பேசுவதும் தர்மமே. * எந்த ஏற்றத்துக்கும் ஒரு இறக்கம் உண்டு. எந்தத் துன்பத்துக்கும் ஒரு இறுதி உண்டு. * விருந்தினர் போல் நீயும் இந்த உலகில் சிறிது காலமே தங்க வந்திருக்கிறாய். * பெண்களின் பங்களிப்பு இருந்தால்தான் குடும்பம் முன்னேறும். * காலம் ஓடுகிறது. பருவம் மாறுகிறது. இதை புரிந்து கொள். * கஷ்டம் வரும் போதுதான் பல உண்மைகள் தெரிய வரும். * கடவுள் எல்லா உயிர்களிலும் இருக்கிறார். * குழந்தைக்கு கல்வியுடன் விளையாட்டையும் சொல்லிக் கொடு. * எதையும் உடனுக்குடன் செய்யும் போது வெற்றி நிச்சயம்.