வேளிமலை முருகன் கோவிலில் பாரம்பரிய குறவர் படுகளம் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2026 12:04
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் குறவர் படுகளம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது வேலிமலை குமார கோயில். முருகப் பெருமானுக்கும் வள்ளிக்கும் இடையே காதல் வேள்வி நடந்த மலை என்பதால், இதற்கு வேள்வி மலை என்று பெயர். இதுவே பின்னர் வேளிமலையாக மருவியது. இத்தலத்தில் இன்று முருகப் பெருமானின் திருக்கல்யாணத்தையொட்டி, பாரம்பரிய குறவர் படுகளம் நிகழ்வு நடைபெற்றது. விழாவில் வள்ளியுடன் முதியவர் வேடத்தில் செல்லும் முருகப்பெருமானை, வள்ளியின் உறவினர்கள் தடுப்பதும், அவர்களுடன் சண்டையிட்டு முருகன் தனது உண்மையான உருவத்தை வெளிப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.