பதிவு செய்த நாள்
09
ஏப்
2026
11:04
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், கம்பம் போடுதல் நிகழ்ச்சிக்கு பின், வேப்பிலை, மஞ்சள் என, அம்மன் மனம் குளிரும் வகையில், உடுமலை நகரம் மட்டுமின்றி, சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும், தினமும் ஆயிரக்கணக்கான பெண்கள், குடங்களில் தீர்த்தம் எடுத்து வந்தனர்.
பாரம்பரிய இசை முழங்க, ஒவ்வொரு பகுதிகளிலிருருந்தும் மக்கள், மாரியம்மன் கோவிலை நோக்கி ஊர்வலமாக வந்ததால், நகரமே திருவிழா கோலம் பூண்டது. தினமும் பல ஆயிரக்கணக்கான பெண்கள், தீர்த்தம் கொண்டு வந்து திருக்கம்பத்திற்கும், அம்மனுக்கு ஊற்றி வழிபாடு செய்தனர். நோய் நொடிகள், வினைகள் தீர, அம்மனிடமிருந்து தீர்த்தம் பெற்றுச்சென்றனர்.
மழை பொழிய மாரியை வழிபட்டு, தீர்த்தத்தால் அம்மனை குளிர்வித்த பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறவும், மழை பொழிந்து, ஊர் செழிக்கவும் வழிபடும் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது.