Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் ரூ.8 லட்சத்தில் நிழற்கூரை அமைப்பு
எழுத்தின் அளவு:
 காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் ரூ.8 லட்சத்தில் நிழற்கூரை அமைப்பு

பதிவு செய்த நாள்

11 ஏப்
2026
10:04

காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வெயிலில் நிற்குமிடத்திற்கு, கோவில் நிர்வாகம் சார்பில் 8 லட்சம் ரூபாய் செலவில் நகர்த்தும் வகையிலான கூரை அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலில் 29 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த ஆண்டு டிச., 8ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக முகூர்த்தம், அரசு விடுமுறை உள்ளிட்ட நாட்களில் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், மூலவர் சன்னிதியில் இருந்து மூன்றாவது பிரகாரம் வரை பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் வரிசையில் நிற்குமிடத்திற்கு கோவில் நிர்வாகம் சார்பில், கூரை வசதி ஏற்படுத்தப்படவில்லை.


மூன்றாம் பிரகாரத்தில் கருங்கல் தரைதளம் அமைக்கப்பட்டுள்ளதால், கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், தரையில் உள்ள சூடு காரணமாகவும், சுட்டெரிக்கும் வெயில் காரணமாகவும் பக்தர்கள் நீண்ட நேரம் திறந்த வெளியில் நிற்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். எனவே, சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் நிற்குமிடத்திற்கு கூரை வசதி ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து கோவில் பிரகாரத்தில் கூரை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் கதிரவன் கூறியதாவது: கோவில் வெளிபிரகாரத்தில் வெயிலில் நிற்கும் பக்தர்களின் வசதிக்காக முதற்கட்டமாக கோவில் நிதியில் இருந்து 8 லட்சம் ரூபாய் செலவில் நகர்த்தும் வகையிலான நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக கூடுதல் நிழற்கூரை அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar