மாவூற்று வேலப்பர் கோயில் சித்திரைத் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2026 12:04
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயில் சித்திரை திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் வளாகத்தில் மருத மரங்களின் வேர் பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனை கோயிலின் தனிச்சிறப்பு. சுனையில் நீராடி வேலைப்பரை வழிபடுவதால் தீராத வினைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் தேதியில் விழா நடைபெறும். நேற்று இரவு துவங்கிய நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் காவடி, பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவை முன்னிட்டு மாவூற்று வேலப்பர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காவல் தெய்வம் கருப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். ஆண்டிபட்டியில் இருந்து அரசு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்க பெருமாள் கோயில், ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், வீர ஆஞ்சநேயர் கோயில், சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்ப சுவாமி கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.