மாண்டியா மாவட்டம் நாகமங்களா தாலுகாவில் ஆதிசுஞ்சனகிரி மடம் அமைந்துள்ளது. இங்கு மறைந்த மடத்தின் 71 வது மடாதிபதி ஸ்ரீ பாலகங்காதரநாத சுவாமிகள் நினைவாக, ஸ்ரீ குரு பைரவைக்கிய கோவில் கட்டப்பட்டு உள்ளது. இக்கோவில் திறப்பு விழா இன்று நடைபெற்றது. முன்னதாக இதில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 7:15 மணிக்கு டில்லியில் இருந்து இந்திய விமானப்படையின் பி - 777 விமானத்தில் புறப்படும் பிரதமர் மோடி, காலை 10:05 மணிக்கு பெங்களூரு எச்.ஏ.எல்., விமான நிலையத்தில் வந்திறங்கினார். பின், இங்கு தயாராக உள்ள ராணுவ ஹெலிகாப்டரில் 10:10 மணிக்கு புறப்பட்டு, 10:50 மணிக்கு மாண்டியா சென்றடைந்தார். அதன் பின், 11:00 மணிக்கு மறைந்த ஸ்ரீ பாலகங்காதரநாத சுவாமிகள் நினைவாக, சாளுக்கியர், ஹொய்சாலர், சோழர், கங்கை கால சிற்பங்களின் கலவையுடன் திராவிட பாணியில் கட்டப்பட்ட ஸ்ரீ குரு பைரவைக்கிய கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து, அங்குள்ள கால பைரவேஸ்வர சுவாமி கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் பி.ஜி.ஏ., மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள கூட்டத்தில் பங்கேற்க சென்றார்.