கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் சுவாமி சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2026 10:04
கோவை: சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் நடந்தது.
சித்திரை விஷு மலையாளம் கேரளா மாநிலத்தில் கொண்டாடப்படும் சிறப்பு மிக்க பண்டிகை. வருட பிறப்பு என்ற பெயரில் கர்நாடகாவின் துளு பகுதியிலும், தமிழ்நாட்டிலும் கொண்டாடப்படுகிறது. இது மலையாள புத்தாண்டைக் குறிக்கும் பண்டிகை (ஏப்ரல் - மே) மாதத்தின் வரும் சித்திரை முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. விஷு கோள்களின் நிலை கொண்டு இளவேனில் சமதின நாள் ஏற்படும் போது கிரிகோரியன் வருடத்தின் படி ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தநாளில் சூரியன் இந்திய ஜோதிட கணக்கின் படி இராசி மண்டலத்தில், மேஷ இராசிக்குள் நுழைவதால் (முதலாவது ராசி ). விஷு என்ற வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் "சமம்" என்று பொருள். வருடத்தின் ஓர் சமதின நாளைக் குறிப்பதாலேயே அவ்வாறு அழைக்கபடுகிறது அறுவடை பண்டிகையாக கேரளாவில் கொண்டாடப்படுவதால் எல்லா மலையாளிகளுக்கும் இது முக்கியமான பண்டிகையாக கருதப்படுகிறது.இதையொட்டி கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் நடந்தது வண்ண விளக்குகளால் கோவில் வளாகம் காட்சி அளித்தது கோவில் கொடிமரம் முன்பு கிருஷ்ணர் பொம்மை இரண்டு யானைகள் மற்றும் காய்கனிகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன இந்த நிகழ்வொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.