திருப்பூர் போலீஸ் லைன் மாரியம்மன் பூச்சாட்டு பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2026 10:04
திருப்பூர்: திருப்பூர் கோர்ட் வீதியில் உள்ள போலீஸ் லைன் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா கடந்த 31ம் தேதி துவங்கியது. கம்பம் கும்பம் அழைத்து வருதல், சக்தி கரகம் அழைத்து வருதல், அம்மன் அழைத்து வருதல் என, அடுத்தடுத்து நாள் விழா நடந்து வந்தது. காலையில் அபிஷேகம் நடந்தது. நேற்று காலை பொங்கல் மற்றும் மாவிளக்கு ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. போலீஸ் குடியிருப்பு மக்கள் உள்ளிட்டோர் உற்சாகமாக காலையில் குடும்பத்துடன் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து கொண்டாடினர். கருமாரியம்மன் அலங்காரத்தில் காட்சியளித்தார். அனைவரும் குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடி, அம்மனை தரிசனம் செய்தனர். இன்று, மஞ்சள் நீராட்டு விழா, அம்மன் திருவீதி உலா நடக்கிறது.