Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சந்தக்கடை மாரியம்மன் கோவில் தேர் ... ஆதி சங்கரர் ஜெயந்தி : காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சிறப்பு வழிபாடு ஆதி சங்கரர் ஜெயந்தி : காஷ்மீர் முதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இளையனார்வேலுார் முருகன் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவம் தொடக்கம்
எழுத்தின் அளவு:
இளையனார்வேலுார் முருகன் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவம் தொடக்கம்

பதிவு செய்த நாள்

21 ஏப்
2026
04:04

இளையனார்வேலுார்: இளையனார்வேலுார் முருகன் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.


காஞ்சிபுரம் ஒன்றியம், இளையனார்வேலுாரில் உள்ள முருகன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 12 நாட்கள் பிரம்மோத்சவம் விமரிசையாக நடைபெறும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான பிரம்மோத்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், நேற்று காலை 7:15 மணிக்கு வேதவிற்பன்னர்கள் மூலம் கொடிமரத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டன.  தொடர்ந்து வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். பிரம்மோத்சவத்தையொட்டி தினமும் காலையிலும் இரவும், முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருகிறார். அதன்படி முதல் நாள் உத்சவமான இன்று இரவு திருக்கேடயத்தில் உலா வந்தார். இரண்டாம் நாளான இன்று காலை சூரிய பிரபையிலும், இரவு பூத வாகனத்திலும் உலா வருகிறார். மூன்றாம் நாள் உத்சவமான நாளை காலை விமானத்திலும், இரவு சந்திர பிரபையிலும் உலா வருகிறார். இதில், 25ம் தேதி மாலை சென்னை பெரியமேடு இளையனார்வேலுார் பாலசுப்பிரமணியசுவாமி பக்தஜன சபையினரால் மூலவருக்கு பால் காவடியும், உற்சவருக்கு மலர் காவடி சாத்துபடியும், நாதஸ்வர கச்சேரியும் நடக்கிறது. ஏழாம் நாள் பிரபல உத்சவமான தேரோட்டம் வரும் 27ம் தேதி நடக்கிறது. மே 2ம் தேதி இரவு மாவடி சேவையுடன் பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், ... மேலும்
 
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar