அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரமோத்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2026 05:04
அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில், சித்திரை பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.
அச்சிறுபாக்கத்தில் உள்ள புகழ்பெற்ற தொண்டைநாடு சிவ தலங்களில் ஒன்று இளங்கிளி அம்மன் உடனுறைஆட்சீஸ்வரர் கோவில். சைவ சமயக் குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற தலமான இக்கோவிலில், சித்திரை பிரம்மோத்சவ விழா கொடியேற்றம் இன்று காலை நடந்தது. காலா 7:30 மணி முதல் 8:30 மணிக்குள், கோவிலின் எதிரே உள்ள கொடி மரத்தில், தலைமை சிவாச்சாரியார் சங்கர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, பிரம்மோற்சவ சித்திரைத் திருவிழாவுக்கான கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகளான விநாயகர், ஆட்சீஸ்வரர், இளங்கிளி அம்மன், உமா பார்வதி, வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான் ஆகியோருக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.