Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை நடை பிப்.,12ல் மீண்டும் ... திருப்பதி பெருமாளை தரிசிக்க திரிவேணி சங்கமத்தில் ஏற்பாடு! திருப்பதி பெருமாளை தரிசிக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பக்தர்களிடம் மொட்டை போடும் ஊழியர்கள்: கண்டுகொள்ளுமா தேவஸ்தானம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜன
2013
10:01

பழநி: பழநி கோவில் தேவஸ்தான முடி காணிக்கை நிலையங்களில், முடி இறக்கும் பக்தர்களிடம், 10 ரூபாய் கட்டணத்துடன், கூடுதலாக, 100 ரூபாய் வசூலிக்கின்றனர். பழநி கோவில் தைப்பூச விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரை வருகின்றனர். இவர்கள் முடிகாணிக்கை செலுத்துவதற்காக, தேவஸ்தானம் சார்பில் சண்முகநதி, சரவணப்பொய்கை, பூங்காரோடு ரவுண்டானா ஆகிய இடங்களில், நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. முடி காணிக்கைக்கு, 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என, தேவஸ்தானம் அறிவிப்பு பலகை வைத்துள்ளது. பக்தர்களிடம், 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு ரசீது தரப்படுகிறது. இதுதவிர, சம்பளம் குறைவு என்ற காரணம் கூறி, 100 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். பக்தர்கள் புகார் தெரிவித்தாலும், அவர்களுக்கு சம்பளம் குறைவு. அதனால் தான் பணம் கேட்கின்றனர், என, அலுவலர்கள் சமாதானம் செய்து அனுப்புகின்றனர். இதை தேவஸ்தான நிர்வாகம் கண்டும் காணமால் உள்ளது. ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருமானம் உள்ள பழநியில், திருமலை திருப்பதி போல, இலவசமாக முடி காணிக்கை செலுத்த வசதி செய்து தரவேண்டும். முடி இறக்கும் ஊழியர்களுக்கு, கூடுதல் சம்பளம் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், பக்தர்களிடம் முடி காணிக்கைக்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பது தவறு தான். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar