Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் லட்சுமணேஸ்வரர் கோயில் ... பழநி பக்தர்களிடம் மொட்டை போடும் ஊழியர்கள்: கண்டுகொள்ளுமா தேவஸ்தானம்! பழநி பக்தர்களிடம் மொட்டை போடும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை பிப்.,12ல் மீண்டும் திறப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜன
2013
10:01

சபரிமலை: மகரவிளக்கு கால பூஜைகள் முடிந்து சபரிமலை நடை நேற்று காலை அடைக்கப்பட்டது. மாசி மாத பூஜைக்காக பிப்.,12ம் தேதி நடை திறக்கப்படும். சபரிமலையில் மகரவிளக்கு விழா, கடந்த, 14ம் தேதி நடைபெற்றது. அதை தொடர்ந்து தினமும் மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளலும், படிபூஜையும் நடைபெற்றது. மூன்று நாட்கள் சன்னிதானத்துக் கும், நான்காவது நாள் சரங்குத்திக்கும் மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளினார். கடந்த, 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை, தினமும் இரவு, 8:00 மணிக்கு படிபூஜை நடைபெற்றது.

காளைகட்டி, இஞ்சிப்பாறை மலை, புதுச்சேரி கானம்மலை, கரிமலை, நீலிமலை, சபரிமலை, பொன்னம்பலமேடு, சிற்றம்பலமேடு, மயிலாடும்மேடு, தலப்பாறைமலை, நிலக்கல்மலை, தேவர்மலை, ஸ்ரீபாதம்மலை, கர்கிமலை, மாதங்கமலை, சுந்தரமலை, நாகமலை, கருடன்மலை ஆகிய, 18 மலைகளை குறிக்கும் வகையில் சபரிமலையில், 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மலைகளின் தேவதைகளை திருப்தி படுத்தும் வகையில், படிபூஜை நடத்தப்படுகிறது. 40 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும், இந்த பூஜையின் முன்பதிவு, 2028ம் ஆண்டு வரை முடிந்து விட்டது.

மகரவிளக்கு முடிந்த நிலையில், சன்னிதானம் வந்த, பந்தளம் மன்னர் பிரதிநிதி பரணி திருநாள் அசோகராமவர்மா ராஜாவை, தங்க வாள் கொடுத்து தேவசம்போர்டு அதிகாரிகள் வரவேற்றனர். அலங்கரிக்கப்பட்ட யானையுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அவர், 18ம் படிக்கு கீழே வந்ததும் அர்ச்சகர் பாலமுரளி நம்பூதிரி அவரை வரவேற்றார். பின், தங்கவாளுடன், 18ம் படியேறிய மன்னர் பிரதிநிதி ஸ்ரீகோயில் முன் வந்து ஐயப்பனை வணங்கினார். ஐயப்பனை காட்டில் இருந்து எடுத்து வளர்த்த பந்தளம் மன்னர் ஐயப்பனை காண வருவதாக இந்த ஐதீகம் உணர்த்துகிறது. நேற்று காலை ஏழு மணிக்கு அவரது முன்னிலையில் நடை அடைக்கப்பட்டது. அடுத்து மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை பிப்.,12ம் தேதி மாலை திறக்கும். 17ம் தேதி இரவு பத்து மணி வரை திறந்திருக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar