மேட்டுப்பாளையம் குமரன் குன்று முருகர் கோவிலில் திருப்பணிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2026 11:05
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே, குமரன் குன்றில் உள்ள முருகர் கோவிலில் திருப்பணிகள் நடைபெறுகின்றன.
மேட்டுப்பாளையம் அவிநாசி சாலையில், குமரன் குன்றில் கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு தினமும் பூஜைகளும், ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜையும், விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களும், செவ்வாய் மற்றும் விஷேச நாட்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களும் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இக்கோவில் மிகவும் பழமையானது என்பதால், கட்டடங்கள் சிதைந்திருந்தன. புதிதாக பொறுப்பேற்ற அறங்காவல் குழு தலைவர் செல்வகுமார், அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், சரோஜினி, பழனிசாமி, ராமச்சந்திரன் மற்றும் செயல் அலுவலர் சபரீஷ்வரி ஆகியோர் கோவிலில் திருப்பணிகள் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன் மண்டபம் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. அடுத்து கோவிலை சுற்றி வர்ணம் பூசும் பணிகள் நடைபெற உள்ளன. ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேகம் செய்ய அறங்காவலர் குழுவினர் தீர்மானித்துள்ளனர். அதற்குள் அனைத்து பணிகளும் செய்து முடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.