பதிவு செய்த நாள்
25
மே
2026
08:05
கோவை: கோவை ஸ்ரீ மஹா சாஸ்த்ரு சேவா சங்கம் சார்பில், 18வது ஆண்டு சாஸ்தா பிரீத்தி மஹோத்ஸவம் நடந்தது.
ராம் நகர் சத்தியமூர்த்தி சாலையிலுள்ள, ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கத்தில் கடந்த 22ல் மஹோத்சவம் துவங்கியது. 1,008 நெய் அப்பம், 1,008 வலம்புரி சங்குகளில் அபிஷேகம் நடந்தது. உற்சவர் அய்யப்பன் யானை மீது எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.
நிறைவு நளான நேற்று, சபரிமலை தந்திரி ஸ்ரீ மகேஷ் மோகனரு தலைமையில் கணபதி ஹோமம், உஷ பூஜை, அஷ்டாபிஷேகம், அய்யப்ப சரிதம் ஹரிகதாவை வர்ஷா புவனேஸ்வரி குழுவினர் நிகழ்த்தினர். உச்சிக கால பூஜை நடந்தது. பாடகர் வீரமணிராஜூ குழுவினரின் இன்னிசை கச்சேரி நடந்தது. மாலை 5 மணிக்கு நடைதிறப்பு, புஷ்பாபிஷேகம் மாலை 7 மணிக்கு திருவாபரணம் சாத்துதல், படிபூஜை நடந்தது. இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை, ஹரிவராசனம், மஹா தீபாராதனையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.