கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருநீற்றம்மை சுவாமி சிலை பிரதிஷ்டை மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கள்ளக்குறிச்சி சாமியார் மடத்தில் வடக்கு நோக்கி அமைந்திருக்கும் திருநீற்றம்மை உடனுறை செம்பொற்சோதிநாதர் கோவிலில் நேற்று திருநீற்றம்மை சுவாமி சிலை பிரதிஷ்டை மற்றும் திருக்கல்யாண உற்சவமும் நடத்தப்பட்டது. உற்சவத்தையொட்டி, காலை 5:00 மணிக்கு கொடியேற்றம், கோவில் பசு நந்தினிக்கு வளைகாப்பு நடந்தது. காலை 5:45 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து 7:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, புனித நீர், ஆணைந்து வழிபாடு நடந்தது. காலை 8:45 மணிக்கு திருநீற்றம்மை சுவாமிக்கு திருக்குட நன்னீராட்டு செய்தனர். காலை 9:00 மணிக்கு திருநீற்றம்மை செம்பொற்சோதிநாதர் சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. கயிலை வாத்தியங்கள் முழங்க, பஞ்ச புராணம் வாசிக்கப்பட்டது.