Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் இன்று ... வேதாரண்யத்தில் 5 கற்சிலைகள் கண்டெடுப்பு! வேதாரண்யத்தில் 5 கற்சிலைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் கலசங்களில் இருப்பது இரிடியம் அல்ல!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 ஜன
2013
10:01

பெரும்பாலான கோவில் கலசங்களில் உள்ளது, "இரிடியம் அல்ல; செம்பு என, இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.விருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டை, எடைச்சித்தூரில், நூற்றாண்டு பழமை வாய்ந்த கேசவ பெருமாள் கோவிலில், கோபுர கலசத்தை திருடுவதற்காகச் சென்ற, சென்னை தம்பதி கைது செய்யப்பட்டனர். விசாரணையில், கலசத்தில் இரிடியம் இருக்கும் என நம்பி, திருட வந்ததாகக் கூறினர். இந்நிலையில், "பெரும்பாலான கோவில் கலசங்களில் இருப்பது இரிடியம் அல்ல; செம்பு என, இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. மேலும், இரிடியம் இருப்பதாகக் கூறி, கோவில் கலசங்களை திருட முயற்சிப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் எனவும் எச்சரித்துள்ளது.இது குறித்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பல இடங்களில் கோவில்களில் உள்ள கலசங்களில், இரிடியம் இருப்பதாக நினைத்து திருடும் முயற்சிகள் நடந்து வருகின்றன. கலசங்கள் செம்பால் செய்யப்பட்டவை; அதில், கம்பு, கேழ்வரகு, அரிசி, எள், கொள் போன்ற நவதானியங்கள் வைக்கப்படுகின்றன. இதில், வரகு மின் கடத்தியாகச் செயல்படும். கோவிலுக்கு அருகில் இடி விழுந்தால், இடியை உள்வாங்கிக் கொண்டு, மண்ணுக்கு அனுப்பி விடும். இது அனைத்து செம்புக்கும் உரிய பண்பு.இந்த உண்மை அறியாமல், சில சோதிடர்கள் கூறியதை கேட்டு, கலசங்களை திருட முயற்சி செய்கின்றனர். கோவில் சொத்தை அபகரிக்க முயற்சி செய்கிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர்-

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 
temple news
உடுமலை: சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 16ம் தேதி சிறப்பு அலங்கார பூஜையுடன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமியின், 15ம் ஆண்டு ஆராதனை இசை விழா, வேதபுரீஸ்வர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar