Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி நெய்யில் கலப்படம் : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்து முருகன் சிற்பம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்து முருகன் சிற்பம் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2026
11:06

விழுப்புரம்: மரக்காணம் அருகே 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் கால அரிய முருகன் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த ஆலத்துார் கிராமத்தில், விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது, சோழர் காலத்தைச் சேர்ந்த அரிய முருகன் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.


இதுகுறித்து செங்குட்டுவன் கூறுகையில், ‘ஆலத்துார் கிராமத்தில் வயல்வெளியில், வெட்ட வெளியில் பலகைக் கல் சிற்பத்தை அப்பகுதி மக்கள் பெண் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஆய்வில், அது முருகன் சிற்பமாகும். தலையில் கரண்ட மகுடம் அலங்கரிக்க 4 கரங்களுடன் நின்ற நிலையில் முருகன் காட்சி தருகிறார். அவரது பின்னிரு கரங்களில், வலது கரம் சக்தி ஆயுதத்தையும், இடது கரம் அட்ச மாலையையும் ஏந்தியுள்ளன. முன்னிரு கரங்களில், வலது கரம் அபய முத்திரையுடனும், இடது கரம் இடுப்பின் மீதும் உள்ளன. நீண்ட காதணிகள் மற்றும் கழுத்தணி, இடையாடை காணப்படுகின்றன. முகம் தேய்ந்த நிலையில் தெளிவாக இல்லை. இச்சிற்பம் கி.பி.10ம் நூற்றாண்டு சோழர் காலத்தைச் சேர்ந்த, 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். கைகளில் சக்தி ஆயுதம் மற்றும் அட்ச மாலை ஏந்தி நிற்கும் முருகன் சிற்பம் மிகவும் அரியதாகும். மாவட்டத்தில், இதுவரை கண்டறியப்பட்ட முருகன் சிற்பங்களில் இது அரியதும் தனித்துவம் வாய்ந்ததாகும்’ என்றார். ஆய்வின்போது ஆரோவில் நீலமேகம் உள்ளிட்டோர் உடனிருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த விழாவில் இன்று காலை பெருமாள் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பள்ளிக்கு ... மேலும்
 
temple news
நத்தம்: மணக்காட்டூர் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நடந்த கழு மரம் ஏறும் நிகழ்ச்சியில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருக்கனுார்: செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவத்தின் நிறைவாக, தர்மர் பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில் அலர்மேலுமங்கை தாயார் சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar