அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி தெப்பத் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூன் 2026 03:06
காரைக்குடி; காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தெப்ப திருவிழா நடந்தது.
தென்திருப்பதி என்று அழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி திருவிழா கடந்த மே 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி சிம்ம, ஹனுமந்த, யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். கடந்த 28ம் தேதி திருக்கல்யாணம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த மே 31 ல் நடந்தது. நேற்று இரவு தெப்பத்திருவிழா நடந்தது. வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மிதவை தெப்பத்தில் சாமி எழுந்தருளி குலத்தை வலம் வந்தார். படித்துறைகளில் இருந்தபடி பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். இன்று புஷ்ப பல்லாக்கும், விடையாற்றியும் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் அழகம்மை, செயல் அலுவலர் அஜின் செய்து வருகின்றனர்.