Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரபாஞ்சாலியம்மனுக்கு ... அத்திக்கோம்பையில் காளியம்மன் கோயில் திருவிழா; பூவோடு எடுத்து நேர்த்திக்கடன் அத்திக்கோம்பையில் காளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்; 406 கும்பாபிஷேகம் கண்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர்
எழுத்தின் அளவு:
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்; 406 கும்பாபிஷேகம் கண்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர்

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2026
05:06

சிக்கல்: ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்ற சொல்லுக்கு ஏற்ப எங்கு கும்பாபிஷேகம் நடந்தாலும் அதனை முன்கூட்டியே தெரிந்து விழாவில் பங்கேற்பதை தனது வாழ்நாள் கடமையாக கொண்டுள்ளார் ஓய்வு ராணுவ வீரர்.

சிக்கல் அருகே மறவாய்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பழனிவேலு 84. இவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோயில்களில் நடக்கும் கும்பாபிஷேக நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்று தனது தரிசன எண்ணிக்கை கணக்கை உயர்த்தி வருகிறார். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் மாதம் முழுவதும் எங்கு கும்பாபிஷேகம் நடந்தாலும் அது பற்றிய விபரங்களை கேட்டு தெரிந்து கொண்டு அவ்விடத்திற்கு சென்று சுவாமி தரிசனம் செய்வதை வாழ்நாள் கடமையாக கொண்டுள்ளார் பழனிவேலு. அவர் கூறியதாவது: நான் ராணுவத்தில் வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். 1995ல் இருந்து கும்பாபிஷேகம் நடக்கவுள்ள கோயில் மற்றும் அதில் கலந்து கொண்ட நிகழ்வுகள் பற்றி டைரியில் எழுதி வைத்துக் கொள்கிறேன். தற்போது வரை 406 கோயில் கும்பாபிஷேகங்களில் கலந்து கொண்டுள்ளேன். எனது முயற்சிக்கு பல்வேறு கோயில் குருக்கள் மற்றும் வெளியூர் நண்பர்கள் ஆதரவு தருகின்றனர். மூன்று நாள் தங்கியிருந்தும் கும்பாபிஷேக தரிசனத்திற்காக வெளியூர் வந்து விடுகிறேன். எனது வாழ்நாள் முழுவதும் கும்பாபிஷேகத்தை காண வேண்டும் என்ற எண்ணத்தில் அதன் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறேன். இன்றைய தலைமுறைகள் கோயில்களின் பழமை, பாரம்பரியம் அவற்றின் மகத்துவம் பற்றி தவறாமல் அறிந்து கொள்ளவும், இறை வழிபாட்டின் நோக்கங்களை பற்றி தெரிந்து கொள்வதும் அவசிய தேவை என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 மதுராந்தகம்: மொறப்பாக்கத்தில் வீரபாஞ்சாலி அம்மனுக்கும் விஜயனுக்கும் திருக்கல்யாணம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்தார். கோயிலுக்குள் ... மேலும்
 
temple news
 வாடிப்பட்டி: பரவை அண்ணா நகரில் காளியம்மன் கோயில் வைகாசி உற்ஸவம் நடந்தது. சந்தன மாரியம்மன் பஜனை ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி முத்து மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா ... மேலும்
 
temple news
சோழர் பேரரசால் கலை நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள, சிவாலயங்களில், கேசம்பள்ளி அருகே உள்ள சுயம்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar