பதிவு செய்த நாள்
18
ஜூன்
2026
05:06
விருத்தாசலம்: முனீஸ்வரர், வீரனார் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த கோ.பவழங்குடி கிராமத்தில் உள்ள முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இதையொட்டி, நேற்று மாலை 6:00 மணிக்கு, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கணபதி ேஹாமம், முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, நாடி சந்தனம், பூர்ணாஹூதி நடந்தது. அதைத்தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 9:45 மணிக்கு விநாயகர், முனீஸ்வரர், வீரனார், சப்த கன்னி, மற்றும் பரிவார மூர்த்திகள் சுவாமிக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.