இன்று நிர்ஜலா ஏகாதசி விரதம்; விஷ்ணு பகவானை வழிபட நினைத்தது நிறைவேறும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2026 07:06
ஆனி வளர்பிறை ஏகாதசிக்கு நிர்ஜலா ஏகாதசி என்று பெயர். இது அனைத்து ஏகாதசிகளிலும் மிகவும் புனிதமானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.
இது பீமன் அனுஷ்டித்த ஏகாதசி விரதமாகும். இந்த ஏகாதசியின் சிறப்பை கேட்டாலே வைகுண்டம் அடைவார்கள். இந்த விரதத்தால் ஒருவரின் பல தலைமுறையும் பாவத்தில் இருந்து விடுபடும். ஆனி மாதம் வளர்பிறை ஏகாதசி நிர்ஜலா ( நீர் கூடப் பருகாமல் இருத்தல்) எனப்படும். சிலருக்கு அதிக நேரம் உண்ணாமை கஷ்டமாகத் தெரிவதில்லை. பலருக்கு என்றாவது உண்ணாமை சிரமமாக இருப்பதில்லை. இன்னும் சிலருக்கோ, இயற்கையாகவே, ஒரு வேளை கூட உண்ணாமல் இருக்க முடிவதில்லை. இந்த நிலைக்கு பீமன் ஒரு உதாரணம். அவனும் கூட, இந்நாளில் விரதமிருந்து, மறுநாள் துவாதசியிலேயே உணவு ஏற்றதால், நிர்ஜலா ஏகாதசிக்கு மறுநாள் பாண்டவ துவாதசி என்று பெயர். வருடத்தில் வரும் 24 ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த ஒரு ஏகாதசியில் மட்டும் விரதம் இருந்தால், மற்ற அனைத்து ஏகாதசிகளில் விரதம் இருந்ததற்கான முழு பலனும் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. இன்று பெருமாளை வழிபட நினைத்தது நிறைவேறும்.