பதிவு செய்த நாள்
26
ஜூன்
2026
10:06
பேரூர்; பேரூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை அரசம்பலவாணர் கோவில் கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடந்தது.
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் உபகோவிலான அகிலாண்டேஸ்வரி உடனுறை அரசம்பலவாணர் கோவில், பேரூர் படித்துறை செல்லும் வழியில் உள்ளது. இக்கோவிலில், கடந்த, 21ம் தேதி, விநாயகர் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, கால யாக பூஜைகள் நடந்தது. இந்நிலையில், நேற்று காலை, 4:30 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, திருமுறை புறப்பாடு நடந்தது. காலை, 6:45 மணிக்கு, செந்தில் ராஜ குருக்கள் தலைமையில், சிவாச்சாரியார்கள், யாகசாலையில் இருந்து ராஜகோபுரம் மற்றும் விமான கோபுரங்களுக்கு, புனிதநீர் கலசங்கள் கொண்டுவரப்பட்டது. காலை, 7:00 மணிக்கு, ராஜகோபுரம், விமான கலசங்கள், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், அறநிலையத்துறை இணை கமிஷனர் ரமேஷ் மற்றும் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அமைச்சர்கள் சம்பத்குமார், விக்னேஷ் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர்.