Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குழந்தை முத்துக்குமார சுவாமி ... நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வரும் 5ம் தேதி கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வரும் 5ம் தேதி கோலாகலம்

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2026
01:06

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கோபுரங்கள் புனரமைக்கப்பட்டு வரும் 5ம் தேதி மகா சம்ப்ரோக்ஷணம் எனப்படும் கும்பாபிஷேகம் நடக்கிறது.


நடுநாட்டு திருப்பதி. 108 திவ்ய தேசங்களில் ஒன்று. முதல் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக புராதான இதிகாசங்களில் குறிப்பிடப்படுகிறது. இத்தனை பழமையும், பெருமையும் மிக்க திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில், கும்பாபிஷேகம் எனப்படும் மகா சம்ப்ரோக்ஷணம் வரும் 5ம் தேதி நடக்கிறது. கோவிலின் நுழைவு வாயிலில் அமைந்திருக்கும் கிழக்கு ராஜகோபுரம், மேற்கு ராஜகோபுரம், கட்டை கோபுரம் எனப்படும் வடக்கு ராஜகோபுரம், பிரதான சன்னதிகள் மற்றும் விமானங்கள் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 29ம் தேதி மாலை 6:00 மணிக்கு பகவத் அனுக்ஞை, புண்யாகவாசனம், 30ம் தேதி காலை 9:00 மணிக்கு அக்னிப் பிரதிஷ்டையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கி 5ம் தேதி வரை காலை, மாலை இருவேளைகளும் யாகசாலை பூஜைகள் நடக்கிறது. கும்பாபிஷேக தினமான 5ம் தேதி காலை 6:00 மணிக்கு அக்னி ஆராதனம், கும்ப ஆராதனம், பிரதான ஹோமங்கள், 8:00 மணிக்கு பூர்ணாகுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடாகி 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் மூலஸ்தான விமானங்கள், ராஜகோபுரங்கள், மூலவர் பெருமாள், தாயார், வேணுகோபாலன், சக்கரத்தாழ்வார், மணவாள மாமுனிவர்கள் சன்னதிகளில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் எனப்படும் மகா சம்ப்ரோக்ஷணம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் நிர்வாகி கோலாகலன் முன்னின்று செய்து வருகிறார். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 1ம் தேதியிலிருந்து 5ம் தேதி வரை மூலவர் சேவை கிடையாது. அந்த நாட்களில் யாகசாலையில் மட்டுமே பக்தர்கள் சேவை சாதிக்கலாம் என கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ஜாதக குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். நாம் முற்பிறவிகளில் செய்த ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில், வருடாந்திர சலகட்ல ஜேஷ்டாபிஷேகம் விழா நேற்று ஜூன் 26ல் ... மேலும்
 
temple news
கோவை; ஆனி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை உக்கடம் கோட்டைமேடு கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
கோவை; ஆனி மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ஆர் எஸ் புரம் காமாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி மகா ... மேலும்
 
temple news
சிருங்கேரி ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகள், இன்று முதல் ஜூலை 9ம் தேதி வரை கர்நாடகா மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar